வியாழன், 12 டிசம்பர், 2019

இந்திய குடியுரிமை சட்டத் திருத்தத்தின் ஆபத்து


இந்திய குடியுரிமை சட்டத் திருத்தத்தின் ஆபத்து புரியணும்னா வெள்ளைக்காரன் தங்கள் நாடுகளில் குடியேறி உள்ள இந்துக்களை அடிச்சி விரட்டினால் புரியும்..

கொலைகார படுபாதகர்கள் கையில் இருக்கும் அரிவாளும் கத்தியும் துப்பாக்கியும் எவ்வளவு பெரிய ஆபத்தோ அதை விட மிகப்பெரிய ஆபத்து காவிகளின் கையில் இந்திய அரசு இருப்பது.

காங்கிரஸில் இருப்பவர்கள் ஒன்றும் அக்மார்க யோக்கியர்கள் இல்ல தான் ஆயினும் அவர்கள் பாஜகவில் இருப்பவர்களை போன்ற உலக மகா கழிசடைகளாக இல்லை.

அப்படியே இருந்தாலும் பாஜக செய்யும் அட்டூழியங்களை போல வெளிப்படையாக தைரியமா எவர் பொருட்டும் துளியும் கவலை இன்றி எல்லாவற்றையும் தங்கள் இஷ்டத்துக்கு செய்து விட இயலாது.

காரணம் அப்படி செய்வதற்கு அந்த கட்சியின் தலைமைகளே ஒத்துக் கொள்ளாது.

பார்ப்பனர்கள் காங்கிரசில் இருந்தாலும் அவர்களால் பத்து விழுக்காடு உயர்சாதி இட ஒதுக்கீட்டை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்க இயலாது.

மதத்தின் ரீதியாக மக்களை பிரிக்கும் காஷ்மீர் சட்டம் மற்றும் இந்திய குடியுரிமை சட்டத் திருத்தம் போன்றவற்றை எல்லாம் ஒரு போதும் செய்து விட இயலாது.

பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பை பார்த்தாலே தெரியும் அது மோடி அரசால் விலைக்கு வாங்கப் பட்ட தீர்ப்பு என்பது. ஆம் அரசின் அனைத்து அமைப்புகளும் விலை போய் விட்டன.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜவுக்கு  கிட்டத்தட்ட பெரும்பான்மை. அதிமுக போன்ற பாஜக அடிமைகளின் ஆதரவால் .

நீதிமன்றம் சிபிஐ தேர்தல் ஆணையம் என்று எல்லாம் மோடிகளின் கைப்பாவை.

ஆக இன்றைக்கு மோடி அமித்ஷா ஆர்எஸ்எஸ் கும்பல் என்ன நினைக்கிறதோ அவையெல்லாம் நாளை சட்டமாக நடைமுறைக்கு வந்து விடும் மிகப் பெரிய ஆபத்தில் இருக்கிறோம்.

எதிர் கட்சிகள் எதிர்த்து பேசும். போராடும் ஆனால் அதைத் தாண்டி பெரிய அளவில் எந்த மாற்றமும் வரப் போவதில்லை.

பாஜக செய்யும் அனைத்து மதவாத அட்டூழியங்களுக்கும் அடிப்படை இந்துத்வ பெரும்பான்மைவாதம்.

அவற்றை தீர்க்கமாக எதிர்க்க வேண்டிய பெரும்பான்மை மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதை சரி என்று ஏற்பதும் இல்லாவிட்டால் கள்ள மௌனம் காத்து கடந்து போவதும் மிகப் பெரிய ஆபத்தில் போய் முடிய போகிறது.

குறிப்பாக முதலில் இஸ்லாமியர்களை ஒழித்தே தீருவது என்று கங்கணம் கட்டி தீயாய் வேலை செய்கிறது மோடி கும்பல்.

இங்கே இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் மேற்கத்திய நாடுகளில் குடியேறி இருக்கும் இந்துத்வவாதிகள் அங்கும் இதே இந்துத்வா அணி திரட்டலை செய்கிறார்கள்.

பிரிட்டன் தேர்தல் என்றாலும் ஐரோப்பிய நாடுகளின் தேர்தல் என்றாலும் அமெரிக்க தேர்தல் என்றாலும் அங்கேயும் இந்த இந்துத்வா நோய் பரவி இந்துக்களாக ஒன்று சேர்ந்து நாம் ஒரு வேட்பாளரை ஆதரிப்போம் என்ற நிலைக்கு வந்திருக்கிறது.

புலம் பெயர் நாடுகளில் குடியேறி இருக்கும் மக்கள் தங்களுக்கான உண்மையான பிரச்சினைகள் மற்றும் தேவைகளை நிறைவேற்ற சொல்லி ஒரு வேட்பாளரை ஆதரிக்கலாம் நிராகரிக்கலாம். அதில் மதத்துக்கு வேலை இல்லை.

புலம் பெயர் தேசங்களில் மதங்களை கடந்து ஓரணியாய் திரள்வதை விட இந்துத்வா அடிப்படையில் திரள்வதே பெருஞ்சிக்கல் தான்..

மேற்கத்திய நாடுகளில் இனவாத நோய்  தணிந்து வரும் வேளையில் இந்தியாவில் இருந்து மேற்கத்திய நாடுகளில் குடியேறி இருக்கும் இந்தியர்களால் ஈழத்தமிழர்களால் இந்துத்வா நோய் பரவி வருவது பெரும் சாபக்கேடு தான். இதே நிலையை மேற்கத்திய  நாடுகளின் பெரும்பான்மை மதவாதிகளும் செய்து வெறுப்பை கூர் தீட்டினால் அங்கே தினமும் படுகொலைகள்  தான். காரணம் அங்கே அரசு அங்கீகாரம் பெற்ற துப்பாக்கிகள் எல்லாரிடமும் உண்டு.

 மோடி கும்பலின் மதவாத வெறுப்பாலும் வன்மத்தாலும் வரும் ஆபத்து எப்போது இங்குள்ளவர்களுக்கு தீ்ர்க்கமாய் புரியும் என்றால் இங்கிருந்து போய் மேற்கத்திய நாடுகளில் குடியுரிமை பெற்றவர்களால் கட்டப்பட்ட இந்து கோவில்களை இனவாத மதவாத வெறுப்பு கொண்ட மேற்கத்தியர்கள் குண்டு வீசி தகர்க்கும் போதும்

அமெரிக்காவில் குடியேறி இருக்கும் அனைத்து இந்துக்களையும் குறிப்பாக பார்ப்பனர்களையும் அடித்து ஓட ஓட விரட்டினால் மட்டும் தான் இந்தியா இதை உணரும்.

இந்துக்களாக இருப்பவர்களின் குடியுரிமைகளை மட்டும் மேற்கத்திய நாடுகள் ரத்து செய்யும் நிலை வந்தால் தான் பலருக்கும் குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து புரியும்.

வளைகுடா நாடுகளும் மேற்கத்திய நாடுகளும் இந்து பெயர் இருந்தாலே அவர்களை பணியில் சேர்க்காமல் புறக்கணிப்பு செய்தால் தான் இந்தியாவில் உள்ள இந்துத்வ கும்பலுக்கு உணர்ச்சி வரும்..

மேற்கத்திய நாடுகள் ஒரு போதும் அதைப் போன்ற சிறுபிள்ளைத்தனங்களை செய்யாது.. காரணம் அங்கும் இது போன்ற இனவாத மதவாத கழிசடைகள் இருந்தாலும் பெரும்பான்மை அப்படி இருக்காது. ஆதரிக்காது..

மத சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டங்கள் வந்தால் அதை தீர்க்கமாக எதிர்க்க அங்குள்ள பெரும்பான்மை மக்களே போதுமானவர்கள்.

கற்ற கல்வி அதை தான் அவர்களுக்கு கற்று கொடுத்திருக்கிறது.

காலம் செல்ல செல்ல இனவாதத்தில் இருந்து மேற்கத்தியர்கள் விலகும் சூழலில் இந்தியா போன்ற நாடு இந்த காவி கழிசடைகளால் மிகவும் பின்னோக்கி போய் கொண்டிருப்பது கோமாளித்தனமாய் இருக்கிறது.

மத வெறுப்புவாதமும் வன்மமும் நமக்கு மட்டுமே சொந்தம் அல்ல. அதை மேற்கத்தியர்களும் வளைகுடா நாடுகளும் மதத்தின் பெயரால் கையில் எடுத்தால் அது இந்துத்வ இந்தியர்களையும் குத்தி கிழிக்கும் ஆபத்தான ஆயுதம். 

ஆயிரம் பார்ப்பனர்களின் குடியுரிமையை மட்டும் அமெரிக்காவும் பிரித்தானியாவும் தடை செய்யட்டுமே. இங்குள்ள பாஜகவின் அலறல் எப்படி இருக்குமென்று பார்த்து விடலாம்.

இப்படி சொல்வதை பார்த்தும் என் பெயரை பார்த்தும் இங்குள்ள இந்துத்வவாதிகள் பலர் நினைக்க கூடும்.

ஆமாண்டா இங்குள்ள கிறிஸ்தவர்களையும் இந்தியாவை விட்டு துரத்தி விட வேண்டும் என்று.

ஆனால் அந்த மடையர்களுக்கு தெரியாதது ஒன்று என்னவென்றால் எழுபது வருடமாய் தான் நான் இந்தியன். முன்னூறு  வருடமாக தான் நான் கிறிஸ்தவன்.

ஆனால் கீழடி ஆராய்ச்சி சொல்லும் செய்தி போல ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்த தமிழ் மண்ணில் வாழும் ஒரு மாபெரும் தேசிய இனத்தின் பூர்வீக மக்கள் நாங்கள் என்று. மத அடையாளம் எனக்கு இடையில் வந்தது தானேயன்றி நான் எந்த நிலத்திலும் இருந்து இங்கே குடியேறியவன் அல்ல.

 அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற இந்துத்வா இந்தியனும் தமிழ்நாட்டிலேயே தலைமுறை தலைமுறையாய் பிறந்து  வளர்ந்து கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்ட தமிழனும் ஒன்றல்ல.

 ஆகவே என்னை மதத்தின் பெயரால் இந்த நாட்டை விட்டு வெளியே போக சொல்ல எவனுக்கும் அதிகாரம் கிடையாது.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மத தீவிரவாதம் வளர்ந்தால் தான் மோடி கும்பலும் நூல் கும்பலும் மட்டுமல்லாது இந்த இரண்டுக்கும் கோசம் போடும் ஏனைய மாட்டு மூளை முட்டா கும்பலுக்கும் புரியும்.

இந்துத்வா கும்பலுக்கும்  அவர்களின் மதவாத வெறுப்புக்கு என்றும் எதிர்த்து நிற்பது நமது கடமை...

ஆன்டனி வளன்