செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

திலீபன்கள் நம் இனத்துக்கு போதும்!



உண்ணாவிரதத்தால் மாண்டு போன,திலீபன்கள் நம் இனத்துக்கு போதும்! 

உண்ணாவிரதம் ஒரு காலாவதியான போராட்டம்!அணு உலை எதிர்ப்பு போராளிகளே உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்!

உண்ணாவிரதங்கள் மீது,எப்போதுமே நம்பிக்கை இல்லாதவன் நான்! உண்மையில் நமக்கெல்லாம்,இந்த உண்ணாவிரதம் வேண்டாம்! காந்தியார் காலத்தில் இருந்த உண்ணாவிரதத்துக்கு,கொஞ்சம் மரியாதை இருந்தது என்னவோ உண்மை தான்.ஆனால் அதற்கு ஒரு முக்கிய காரணம் வெள்ளைக்காரன்.மனிதனை, மனித உணர்வுகளை மதிக்க தெரிந்தவனிடம் உண்ணாவிரதப் போராட்டம் செல்லுபடியாகும்!

ஆனால் இங்கே தற்போது ஆட்சி செய்பவன்களில் பெரும்பான்மை காட்டு மிராண்டிக் கூட்டத்தை சேர்ந்தவர்கள்.சுயநல ஊழல்வாதிகள்.சமூகம் குறித்த எந்த அக்கறையும் அற்ற அரை வேக்காடுகள். ஆட்சியாளர்களில் முக்கால்வாசிப் பேர் செவுடர்கள். ஊமைகள், கண் தெரியாதவர்கள்.உடலில் அல்லாமல் செயல்பாடுகளில் பெரும்பான்மை மாற்றுதிறனாளிகளாக இருப்பவர்கள் தான் இன்றைய ஆட்சியாளர்கள்!

மக்களைக் குறித்து எந்த அக்கறையும் அற்ற கொலைகாரர்களிடமும்,கொள்ளைக்காரர்களிடமும்,ஒழுக்கங் கெட்டவர்களிடமும் என்ன நியாயத்தை எதிர் பார்ப்பது?

அண்ணா ஹசாரே என்று ஒரு வடநாட்டு கிழவன் உண்ணாவிரதம் இருக்கிறான் என்றால் அதற்கு ஆதரவு அளிக்க இந்தியாவின் அத்தனை கார்ப்பரேட் களவாணி ஊடகங்களும் முன் நிற்கும். சினிமா கூத்தாடி அத்தனை பெரும் டெல்லிக்கு விமானத்தில் போய் ஆதரவு தருவான். பலவேறு மதங்களை சேர்ந்த சாமியார்கள் ஆதரவு தருவார்கள்.

தோல் செவப்பா இருக்குற,வடநாட்டு பிள்ளைகள் கற்பழிக்கப் பட்டால், இங்க சென்னையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராடும் கூட்டம் இருக்கும்.ஆனா தோல் கறுப்பா இருக்குற புனிதாவுக்கு அதே பாலியல் கொடுமை நடந்தால் வாய் திறக்காத கூட்டம். இடிந்தரையில் போராடும் நமக்கு தோல் சிவப்பா இல்லை, கார்ப்பரேட் களவாணி ஊடகங்கள் நம்மிடம் இல்லை. போராட்டத்தின் பின்புலமாய் வலுவான எந்த அரசியல் கட்சிகளும் இல்லை.அதையும் மீறி ஆதரவு தரும் கட்சிக்காரன் எல்லாம் உண்மையாய் வருவதில்லை.
வெறும் வாக்கு எண்ணிக்கைகாகவே நம்மளை தேடி வருகிறான்.

*விமானம் ஏறி வந்து,நமக்கு ஆதரவு தரும் பெரிய பெரிய சினிமா கூத்தாடிகளும் நமக்கு இல்லை.

*மெழுகுவர்த்தி ஏந்தி போராடும் பிரபலமான சினிமா முற்போக்கு பெண்ணிய போராளிகள் நமக்கு இல்லை.

*ராதாபுரம் சட்ட மன்ற உறுப்பினருக்கு சினிமா எடுக்கவே நேரம் போதவில்லை.கட்சி மாறி சண்டை போடவே நேரம் சரியா இருக்கு!

*நெல்லை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்று ஒருவன் இருக்கிறானா என்பதே தெரியவில்லை.

*நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு முதுகெலும்பே இல்லை.

*சினிமா கூத்தாடி வழி வந்த ஜெயலலிதாவுக்கு சாமானிய மக்களின் கவலைகள் புரியாது.

*கருணாநிதி குடும்பத்துக்கு, அவிங்க குடும்ப சண்டையையும்,ஏற்கனவே கொள்ளை அடித்த பணத்தை பங்கு வைக்கவுமே நேரம் பத்தாது!

*ராமதாசுக்கு சாதி சண்டையை புதுசா எப்படி கிளப்பலாம் என்று சிந்திக்க நேரம் போதாது.

*வைகோவுக்கு, மோடியைப் பார்த்த கணத்தில் இருந்து எல்லாம் மோடி மயம் என்று பஜனை பாடுவதற்கே நேரம் போதவில்லை.

*சோனியா குடும்பத்துக்கு அடுத்த ஊழல் எப்படி செய்யலாம், ஈழத்தை தொடர்ந்து,தமிழர்களை ஒட்டு மொத்தமாக கொல்ல என்ன வழி என்று சிந்திக்கவே நேரம் போதவில்லை.

*மங்குனி பிரதமர் மண்ணு மோகன் வாய் பேசுவாரா அல்லது வெறும் ரோபோவா என்பதே இந்திய மக்களுக்கு இன்னும் தெரியவில்லை.

*நாராயணசாமிக்கு கிளிப்பிள்ளை போல சொன்னதையே திரும்ப சொல்வதை தவிர,சுயமாய் சிந்தித்து பேசம் அளவுக்கு மூளை கிடையாது.

*அணு விஞ்ஞானி பாலுவுக்கு மீனவர்கள் எல்லாம் ஒன்றும் தெரியாதவர்கள் என்பதைத் தவிரே வேறெதுவும் பேச தெரியாது.

*காங்கிரஸ் கோமாளி கோபண்ணாவுக்கு,பொய்களைத் தவிர வேறெதுவும் பேசத் தெரியாது.

*பாரதிய ஜனதா காரனுங்களுக்கு மோடி புகழ் பாடவும், அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவதும் எப்படி என்று சிந்திக்கவே நேரம் போதவில்லை.

இத்தனை கோமாளிகளையும் வைத்துக் கொண்டு நம்ம யாருக்காக உண்ணாவிரதம் இருந்து, எவனிடம் நியாயம் கேட்க?

நம் உயிர்களை மதிக்க இங்கே எவனும் இல்லை! தேர்தல் வியாபாரத்துக்கு பேரம் பேசவே அவிங்களுக்கு நேரம் போதவில்லை.

இங்க இருக்குற அம்புட்டு அரசியல்வாதி பயலும்,அயோக்கியப் பயலுக, செவுட்டுப் பயலுக, கண்ணு தெரியாத பயலுக!

இவை எல்லாவற்றையும் விட,எவன் போராடினாலும்,எவன் செத்தாலும் நமக்கென்ன,என்று சற்றும் கவலை அற்ற அலட்சியமான பெரும்பான்மை மக்கள்!

இவிங்க நம்ம உண்ணாவிரதத்தை எல்லாம் மதிப்பானுங்கன்னு நம்பிக்கை ஒருபோதும் இல்லை. காலாவதியான இந்த உண்ணாவிரத போராட்டத்தை நாம் கை விடுவோம்!போராட்ட வழிகளை மாற்றுவோம்!

உண்ணாவிரதத்தில் மாண்டு போன திலீபன்கள் நம் இனத்துக்கு போதும்!

இனி ஒருபோதும் வேண்டாம் இந்த உண்ணாவிரத உயிரிழப்புகள்!

-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக