வியாழன், 10 நவம்பர், 2016

முதுகெலும்புள்ள ராஜ்கமல்ஜா.



முதுகெலும்புள்ள ராஜ்கமல்ஜா...

இதழியல் துறையை நோக்கி கடுமையான விமர்சனங்களை வெகு ஜன மக்கள் முன் வைப்பதும், ஆட்சியாளர்களின் கைப்பாவைகளாக பல ஊடகங்கள் இருப்பதும் கண்கூடாக நாம் பார்க்கும் அன்றாட காட்சிகள் தான்..

மோடியின் ஆட்சியே வெறும் ஊடக பிம்பங்களால், மாயாஜால கண்கட்டி வித்தைகளால் கட்டியமைக்கப்பட்ட வெற்று பிம்ப ஆட்சி தான் என்பதை கடந்த இரண்டு ஆண்டுகளாக பார்த்து வருகிறோம்...மனசாட்சி உண்மையாய் வேலை செய்பவர்களின் கண்களுக்கு மட்டுமே அந்த உண்மை தெரியும்..

ஆனாலும் பத்திரிக்கையாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில், வெற்று பிம்ப நாயகனை உட்கார வைத்து, மோடிஜி நீங்க சூப்பர் ஜி, நீங்க பேசிய பிறகு நாங்க பேசுவதற்கு என்ன இருக்குஜி என்று வஞ்ச புகழ்ச்சி அணியில் சும்மா நங்கு நங்கு என்று கொட்டிய ராஜ்கமல்ஜா நிஜமாவே நீர் உண்மையான பத்திரிக்கையாளன்யா...

செல்பி ஜார்னலிசம் பற்றி பேசியதும், மோடிஜி முகத்தில் அப்படி ஒரு இறுக்கம், ஈயாடவில்லை...அரசாங்கம் ஒரு பத்திரிக்கையாளனை பாராட்டினால், அது தான் அபாயம் என்று பத்திரிக்கையாளன் உணர வேண்டும்,பத்திரிக்கையாளனை நோக்கி அரசாங்கம் வைக்கும் கடுமையான விமர்சனங்கள் தான், உண்மையான பாராட்டு, உண்மையான இதழியல் மற்றும் ஊடகம் செத்து போகவில்லை, மாறாக பொய்யான சில ஊடகங்களின் ஊளை சத்தம் சற்று ஓங்கி ஒலிக்கிறது என்று பேசிய தருணம் நிஜமாவே எழுந்து நின்று கைதட்டணும் போல இருந்துச்சய்யா...

முதுகெலும்புள்ள உண்மையான பல பத்திரிக்கையாளர்கள் இன்னும் உயிர்ப்புடன் ஆங்காங்கே வீரியமாய் செயல்பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள் என்பது தான் உண்மையான மகிழ்ச்சியே..

எல்லாத் துறைகளிலும் உள்ள சில/பல பன்றிகள் உண்டு.. அவை சேற்றில் உழல்வது அவற்றின் இயல்பு.ஆனால் பன்றிகளைப்பற்றி கவலைப் படுவதை விட அந்த நேரத்தில் சில சிங்கங்கள் கெம்பீரமாய் உறுமும் குரலில் தான் நம்பிக்கை பிறக்கிறது..காரணம் அவை தான் காட்டின் உண்மையான பெருமைக்குரிய ராஜாக்கள்...

ராஜ்கமல் ஜா நீ சிங்கம்யா...

ஆனாலும் மோடிஜிகள் இவற்றை எல்லாம் துடைத்து போட்டு போய் விடுவார்கள், எதோ ஒரு வகையில் பழி தீர்க்கும் நேரம் பார்த்துக் கொண்டு இருப்பார்கள்...திருந்த வாய்ப்பில்லை என்பதற்காக உண்மைகளை உறங்க விட கூடாதே!

கரன்தாப்பாரிடம் பேட்டியின் முதல் கேள்விக்கே தண்ணீர் வாங்கி குடித்து விட்டு ஓடிய மோடிஜிக்கு, இந்த விழாவில் எழுந்து ஓடுவதற்கு வழி இல்லாமல் போனது துரதிர்ஷ்டம் தான்.:)

-ஆன்டனி வளன்

அமைதிப்படை அமாவாசைகளின் மோசடிகளுக்கு ஜே.




அமைதிப்படை அமாவாசைகளின் மோசடிகளுக்கு ஜே..
பெரும் புகழுக்கும்,பெருமைக்கும் உரியவரும், ரிசர்வ் வங்கியின் சிறப்பான ஆளுநருமாக செயல்பட்டுக் கொண்டிருந்த ரகுராம் ராஜனை, சமீபத்தில் மீண்டும் அமேரிக்கா போய்விடு என்று துரத்த வேண்டிய காரணம் என்ன?
இந்த நாட்டின் பெரும் முதலாளிகள், பொதுத்துறை வங்கிகளில் வாங்கிக் குவித்து இருக்கும், பல லட்சம் கோடி வாராக் கடனை வசூலித்தாக வேண்டும் என்ற வலுவான கோரிக்கையை அவர் முன் வைத்தது. தானே.
இந்த பெரும் முதலாளிகள் யார்? அம்பானிகளும், அதானிகளும் ,எஸ்ஸார் குழுமங்களும்,டாட்டாக்களும் தானே...இவர்களின் வாராக் கடன்கள் எவ்வளவு என்று பார்த்தால் எல்லாம் பல லட்சம் கோடிகள்...
இந்த வாராக் கடன்களை மோடிகள் தள்ளுபடி செய்வார்கள்.ஆனால் பத்தாயிரம் தவணைத் தொகை கட்டாத விவசாயியை,மாணவனை குண்டர்கள் வைத்து வங்கிகள் அடித்து, அவமானப் படுத்தி தற்கொலை செய்ய வைக்கும்..
லலித் மோடிகளும், மல்லையாக்களும், அம்பானி, அதானிகளும் இத்தனை லட்சம் கோடி கடன்களை வைத்துக் கொண்டு இன்னமும் சொகுசாய் வாழ்ந்து கொண்டிருக்கும் நாடு இது..ஆக இந்த அரசுகள் யாருக்காக இயங்குகின்றன? யார் நலன்களை முன்னிறுத்துன்றன?
வெளிநாடுகளில் இருக்கும் கருப்பு பணத்தை இந்தியா கொண்டு வந்தே தீருவேன், அந்த பணத்தில் பல லட்சங்கள் உங்கள் பங்காக வங்கிக் கணக்கில் செலுத்துவேன் என்று சொன்ன பித்தலாட்ட மோடி, இன்று வரை, வெளிநாடுகளில் பணம் பதுக்கி வைத்திருக்கும் அயோக்கியர்கள் யார் என்ற பெயர் பட்டியலைக் கூட வெளியிட தயாரில்லை.
கருப்பு பணத்தின் பெரும் பகுதி வெளிநாடுகளில் தான் பதுக்கப் பட்டு இருக்கிறது..அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கப்படும் ஆயிரக் கணக்கான கோடிகள் எல்லாம் கருப்பு பணம் இல்லையா?
கட்சிகளுக்கு கொடுக்கப் படும் நன்கொடை எவ்வளவு, யார் கொடுத்தார் என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்துக்குள் கொண்டு வர முடியுமா என்றால் கள்ள மௌனம் காக்கும் இந்த கேடிகள் தான் கருப்பு பணத்தை ஒழிக்க கிளம்பி இருக்கிறார்கள் என்பதை நம்புவது தான் தேசபக்தி..
ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தடை செய்ய போகிறோம் என்ற தகவல் எல்லாம் உங்களுக்கும், எனக்கும் வேண்டுமானால் தெரியாமல் இருந்திருக்கலாம்.ஆனால் இங்கிருக்கும் கருப்பு பண முதலைகளுக்கு முன் கூட்டியே அறிவிக்கப்பட்டு, அந்த பணம் எல்லாம் முறையாக பாதுக்காக்கப் பட்டு இருக்கும் என்பதை எல்லாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை..
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் போது பிடிபட்ட, போலி வாகன எண்கள் கொண்ட மூன்று கண்டைனர் பணம் எல்லாம் யார் பணம் ,எங்கே போனது என்பதையெல்லாம் பார்த்த பிறகுமா, மோடி அரசு ஊழலை ஒழிக்கும், கருப்பு பணத்தை ஒழிக்கும் என்று நம்புகிறீர்கள்?
ஊரை ஏய்ப்பவன் எல்லாம் அசையா சொத்துகளாகவும், தங்கமாகவும், வைரமாகவும், பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் நிலங்களாகவும், வெளிநாடுகளில் வங்கிக் கணக்காகவும், வெளிநாடுகளில் வியாபாரம், ஹோட்டல் என்று பல தரப்பட்ட வழிகளில் பதுக்கி விட்டு நிம்மதியாக இருக்கும் போது, சாமானியர்களை எல்லாம் இம்சை படுத்துவதும், அதற்கும் கூட வக்கலாத்து வாங்கிக் கொண்டு இந்தியா வல்லரசாகிக் கொண்டு இருக்கிறது என்று வெற்று கூச்சலிடுவதும்பெரிய காமெடி தான்...
மோடி வாழ்க, இந்தியா வல்லரசாகி கொண்டிருக்க, நாமெல்லாம் மோடியின் இது போன்ற இம்சைகளை சகித்தாக வேண்டும் என்று பாடம் எடுக்கிற பெரும்பான்மை பயலுக,தேர்தலுக்கு முன்பும் கூட, குஜராத் ஒளிர்கிறது, குஜராத் அமெரிக்க, ஐரோப்பா போல அருமையா இருக்கிறது, குஜராத் சாலைகள் எல்லாம் பளிங்குகளாக இருக்கிறது, குஜராத் ரயில்கள் எல்லாம் ஐரோப்பிய ரயில்கள் போல இருக்கிறது, மோடி வளர்ச்சி நாயகன் என்றெல்லாம் கூலிக்காக மாரடித்த ஊடகங்கள்,சமூக வலையத்தளங்களின் திட்டமிட்ட உளறல்களை உண்மை என்று நம்பி, வெறும் போட்டோஷாப் படங்களை பார்த்து புளகாங்கிதம் அடைந்து வாழ்க வாழ்க மோடி வாழ்க என்று கூச்சலிட்டதும் இதே தேச பக்த பயலுக தான்...
ஆனால் உண்மையில் குஜராத் தமிழ்நாட்டை விட படு மோசம், இதெல்லாம் வெறும் போட்டோசாப் மட்டுமே என்று சிலர் சொன்ன போது, குஜராத்துக்கே போகாத பயலுக கூட,அதை நம்பாமல் மோடிக்கு வக்கலாத்து வாங்குன பயலுக தான்...
மோடி எம்,ஏ யும் படிக்கவில்லை, டீ ஆத்தவும் இல்லை , அதெல்லாம் முழுக்க முழுக்க அனுதாபதுக்கான பித்தலாட்டத் தனம் என்று சொன்ன போதும், இல்லை மோடி மனிதருள் மாணிக்கம் என்று அதீத கூச்சலிட்டதும் நம்ம பயலுக தான்..
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மோடி எம்ஏ படித்ததற்கான ஆதாரம் கேட்டால் சத்தம் இல்லை..இப்படி முழுக்க முழுக்க பிராடு, பித்தலாட்டம் செய்து, வெறும் வாயில் வடை சுட்டதொடு, மாபெரும் இனப்படுகொலையை குஜராத்தில் நிகழ்த்திய வன்முறையாளன் தான் மோடி என்று சொன்ன போதும், இல்லை இல்லை, வளர்ச்சி வளர்ச்சி அது ஒன்று தான் எங்களுக்கு முக்கியம் என்று மோடியின் அனைத்து அயோக்கியத் தனங்களையும் புறம் தள்ளி விட்டு, மோடிக்கு கோஷம் போட்ட முக்கால் வாசிப் பயலுக நம்ம ஊர் படிச்ச முட்டாப் பய கூட்டம் தான்...
மோடிகளின் நோக்கம் மிகத் தெளிவு... இந்துத்வாவை வளர்க்க வேண்டும், அம்பானி, அதானிகளை வளர்க்க வேண்டும் அதனால் தாங்களும் பலன் அடைய வேண்டும், மத ஒற்றுமையை சீர்குலைத்து மக்களுக்குள் வெறுப்பை விதைத்து அரசியல் செய்ய வேண்டும், கலவரங்களை தூண்ட வேண்டும், கல்வியில் சமஸ்கிருதத்தை திணிக்க வேண்டும்,
குலக் கல்வி திட்டத்தை புதிய கல்விக் கொள்கை திட்டமாக அறிவிக்க வேண்டும்,
இட ஒதுக்கீட்டை தடுக்க வேண்டும்,மாநில அரசின் அதிகாரங்களை பிடுங்க வேண்டும், தலித்துகளையும், இஸ்லாமியர்களையும் ஒடுக்க வேண்டும், ராமர் கோயில் கட்ட வேண்டும், பாகிஸ்தான் பெயரை சொல்லியே கடைசி வரை அரசியல் செய்ய வேண்டும், இந்துத்வ தீவிரவாத ஆர்.எஸ்.எஸின் கொள்கைகளை நடைமுறைப் படுத்த வேண்டும் போன்ற சில்லறைத் தனமான கொள்கைகளை முன்னெடுப்பதை தவிர,
ஊழல் இல்லாத தேசமாக மாற்ற வேண்டும், வளர்ச்சியை நோக்கி நகர்த்த வேண்டும் என்ற எந்த வெங்காய நோக்கமும் இல்லை...
கடந்த இரண்டரை ஆண்டுகள் சொல்லத் தகுந்த எந்த வளர்ச்சியும், முன்னேற்றமும் இந்த தேசத்துக்கு வந்து விடவில்லை என்பது கண்கூடு...சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிக குறைந்த போதும், இங்கே பெட்ரோல் விலை? காஸ் மானியங்கள் தடை..ரேஷன் மானியங்கள் தடை...ரயில்வே துறையில் அதீத கொள்ளை. காவிரி போன்ற மாநில சிக்கல்களில், நியாய தர்மங்களை புறம் தள்ளி விட்டு, தேர்தல் அரசியல் லாபமே அவர்கள் இலக்கு...
அந்நிய முதலீடுகளை முன்னிறுத்தி இந்த நாட்டை மீண்டும் அடமானம் வைக்கும் வேலையை மட்டுமே செய்து வருவதோடு சாதி, மத மோதல்களை தூண்டி மக்களை ஒரு வித பதட்டத்தோடு வைத்திருக்கிறது...மாட்டை வைத்து அரசியல் செய்கிறது... இதெயெல்லாம் தாண்டி எந்த சாதனையையும் இந்த ஆட்சி செய்து விடவில்லை...
அம்பானிகளிடம், அதானிகளிடம் வராத கடன்களை வசூலித்து விட்டு வந்து பேசினால் யோக்கியன் என்று நம்பலாம்...வெளிநாடுகளில் பணம் பதுக்கி இருக்கும் பணக்காரர்களின் பட்டியலையும், அவர்களின் கருப்பு பணத்தையும் மீட்டு வந்த பிறகு பேசினால் யோக்கியன் என்று நம்பலாம்...கட்சிகளின் நன்கொடையாக வந்த கருப்பு பணத்தின் கணக்கை மக்களிடம் காட்டிய பிறகு வந்து பேசினால் யோக்கியன் என்று நம்பலாம்...ஆனால் அமைதிப் படை அமாவாசைகள் ஒருபோதும் அவற்றை செய்யப் போவதும் இல்லை...
மோடி என்ன செய்தாலும் சூப்பர் சூப்பர் மோடி வாழ்க என்ற வெற்று கூச்சல்களும், வெற்று கூச்சல் தோசை பக்த நாயகன்களும் திருந்த போவதும் இல்லை..
மோடி மஸ்தானின் மோசடி வித்தைகளில் இருந்து ஒரு போதும் நாம் பாடம் கற்றுக் கொள்ள போவதும் இல்லை.
ரஜினிகாந்தே சொல்லிட்டார், வைகோவே சொல்லிட்டார் அப்படின்னா கண்டிப்பா நல்ல திட்டமா தான் இருக்கும்.. காரணம் ரஜினிகாந்திடம் கருப்பு பணமே இல்லை..வரி எல்லாம் முறையா தான் கட்டுறார்:) நம்புங்க...
பாரத் மாதாக்கீ ஜே:)
-ஆன்டனி வளன்