ஞாயிறு, 16 மார்ச், 2014

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அய்யா வைகோ!


விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அய்யா வைகோ!

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில்,(ம)ற்றுமொரு திமுக வேட்பாளர்கள் அனைவரும் கூட தோற்றுப் போகட்டும்,கவலை இல்லை. ஆனால் விருதுநகரில் மட்டும்,வைகோ என்ற நல்ல மனிதன் ஒருபோதும் தோற்கக் கூடாது.அப்படி ஒருமுறை அவர் தோற்றுப் போனால் அந்த தோல்வி, ஒட்டு மொத்த தமிழர்களுக்கான தோல்வி.

நாடாளுமன்ற தேர்தலில் (ம)ற்றுமொரு திமுக வின் தோல்வி என்பது, அவர்களின் தவறான கொள்கை முடிவுகளுக்காக, தவறான கூட்டணி முடிவுகளுக்காக, ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் எப்போதும் நிற்க வேண்டிய,திராவிட இயக்க வழி வந்தவர்கள் அதிலிருந்து முற்றிலும் முரண்பட்டு,சந்தர்ப்பவாதமாக ஒரு இனப்படு கொலைக்காரனுடன் கரம் கோர்க்கும் தவறான கொள்கை முடிவுக்காக,மதவாத கூட்டணிக்காக, அந்த கட்சி இந்த தேர்தலில் சம்மட்டி அடி வாங்க வேண்டும், படுதோல்வி அடைய வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால் விருதுநகர் தொகுதியில் வைகோ என்ற தனி மனிதன் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.அந்த மனிதனின் கொள்கை முடிவுகளில், அரசியல் கூட்டணி முடிவுகளில் ஏராளமான குறைகள் இருந்தாலும், உலகில் தமிழினத்துக்கு ஒரு சிக்கல் என்றால்,அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஓங்கி ஒலிக்கும் முதல் குரலாக இருப்பது அய்யா வைகோவின் குரல் தான் என்பதை எவரும் மறுக்க இயலாது.

வைகோவின் பொன் விழா காணும் ஐம்பது ஆண்டு பொது வாழ்வில், ஊழல் என்ற சொல்லின் சுவடே கிடையாது.முப்பது ஆண்டு கால ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டத்தில்,விடுதலைப் புலிகளுக்கு எப்போதும் உறுதுணையாக நின்றவன்.அதற்காக எண்ணற்ற துயரங்களையும்,இழப்புகளையும் தன வாழ்வில் சந்தித்த போதிலும் கூட, தான் கொண்ட கொள்கையில் ஒரு போதும் பின் வாங்காத லட்சிய மனிதன், மட்டுமல்ல விடுதலைப் புலிகளுக்கு இன்று வரை நம்பிக்கையாய் இருக்கும் பச்சைத் தமிழன்.

அணு உலை எதிர்ப்பு போராட்டம், ஸ்டேர்லைட் போராட்டம், கெயில் போராட்டம், மூவர் விடுதலை,விவசாயிகள் போராட்டம், ஈழத் தமிழர் போராட்டம் என்று அன்றாடம் அந்த மனிதன் நிற்காத போராட்ட களங்களே இல்லை.

எனவே (ம)ற்றுமொரு திமுக என்ற கட்சியின் தவறான கொள்கை மற்றும் கூட்டணி தவறுகளை எல்லாம் தாண்டி,ஒரு உண்மையான களப் போராளியான வைகோ விருதுநகர் மண்ணில் வெற்றி பெற வேண்டும். தமிழர்கள் நன்றி உள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும்.

கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில்,விருதுநகரில் மாணிக் தாகூர் என்ற காங்கிரஸ்காரனிடம் தோற்றுப் போகும் அளவுக்கா வைகோவுக்கு தகுதி இல்லாமல் போய் விட்டது?

மாணிக் தாகூர் என்ற கூமுட்டையனிடம் எல்லாம் வைகோ தோற்றுப் போனது அநியாயம். ஜீரணிக்க முடியாத கொடூரம். எந்த ஒரு பொது விடயமோ, வரலாறோ,மக்கள் பிரச்சினைகள் குறித்த சிந்தனையோ இல்லாத ஒரு கூமுட்டையன் தான் இந்த மாணிக் தாகூர். பல்வேறு தொலைக்காட்சி விவாதங்களில்,இந்த மாணிக் தாகூரைப் பார்த்த போது, ஐயோ விருதுநகரில் இவனிடமா தோற்றுப் போகும் அளவுக்கு அய்யா வைகோவின் நிலை வந்தது என்று என்னை நானே நொந்து கொண்டேன்.

மீண்டும் ஒருமுறை விருதுநகர் மண்ணில் வைகோ தோற்றால் அது தமிழ்நாட்டு மக்கள் அந்த போராளிக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம்.

நல்ல அரசியல்வாதிகளை அங்கீகரிக்க வேண்டிய நேரத்தில் நீங்கள் அங்கீகரிக்காமல் போவீர்கள் என்றால்,அது இந்த இனத்தின் நன்றி கெட்டத்தனம் மட்டும் அல்ல,நல்லவர்களை தோற்கடிக்க வைப்பது இந்த இனத்தின் சாபக்கேடும் கூட.

காங்கிரஸ் தோற்கலாம்,(ம)ற்றுமொரு திமுக தோற்கலாம்.ஆனால் காமராஜரும்,வைகோவும் ஒரு போதும் தோற்கக் கூடாது.

விருதுநகர் மண்ணில் எந்த கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தினாலும், வைகோவை விட சிறந்த வேறு எந்த வேட்பாளனும் அந்த மண்ணுக்கும் மக்களுக்கும் கிடைக்க மாட்டான் என்பதை சத்தியமாய் சொல்வேன்.

விருதுநகரில் கட்சி நிலைப்பாடுகளை எல்லாம் தாண்டி,நல்லவர்களின் ஆதரவு வைகோவுக்கு மட்டுமே இருக்க வேண்டும்! அப்படி இருப்பது தான் நியாயம்!இந்திய நாடாளுமன்றத்தில்,மீண்டும் அந்த மனிதனின் குரல் தமிழர் நலனுக்காக ஒலிக்க வேண்டும்!

உடனே தூத்துக்குடியில் ஜோயலுக்கும்,காஞ்சிபுரத்தில் மல்லை சத்யாவுக்கும் வாக்களிக்க வேண்டும் என்று மற்றுமொரு திமுகவினர் கேட்பார்கள்:) ஆனால் யோக்கியன் யாரென்று மக்களுக்கு தெரியாதா என்ன?

வைகோவுக்கு மட்டுமே இந்த விதிவிலக்கு:)மாறாக ஒட்டு மொத்த (ம)ற்றுமொரு திமுகவுக்கும் அல்ல!

(ம)ற்றுமொரு திமுக வின் மீதான என் விமர்சனங்கள் அப்படியே இருக்கின்றன!

வாழ்த்துக்கள் அய்யா வைகோ! நீங்கள் வெற்றி பெற வேண்டும்! பெறுவீர்கள்!

அன்பின் ஆழத்தில்
ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக