செவ்வாய், 23 ஜூன், 2015

அப்துல் கலாமே சொல்லிட்டாரு!


தேனீ நியூட்ரினோ திட்டம் வளர்ச்சிக்கு மிகத் தேவையான ஒன்று என்று அப்துல் கலாமே சொல்லிட்டாரு.அப்போ சரியாத் தான் இருக்கும்:)
ஏற்கனவே கூடங்குளம் அணு உலை தான் உலகத்தரம், அங்கே எல்லாம் சரியா இருக்கு என்று நேரடி ஆய்வு செய்த அப்துல் கலாம் சொல்லியே ரெண்டு வருஷத்துக்கு மேல ஆச்சு.
ஆனால் எல்லாம் சரியா இருக்கு என்று அப்துல் கலாம் சொல்லிய பிறகு,கடந்த இரண்டு ஆண்டுகளாக அங்கே நடந்த விபத்துக்களும், பழுதுகளும் தினசரி பத்திரிக்கை செய்திகள்.
இன்னும் பதினைந்து நாளில் அணு மின்சாரம் வந்து விடும் என்று சொல்லி சொல்லி கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேலான பதினைந்து நாட்கள் வந்தாயிற்று. ஆனால் அணு மின்சாரம் வந்தபாடில்லை.அணு உலை தயாரானதாய் எந்த தகவலும் இல்லை.
அணு விஞ்ஞானிகள் என்று சொல்லும் அம்புட்டு பயலும் வாயைத் திறந்தாலே பொய் பொய்யாத் தான் பேசுறான்.
இதுல வேற அணு உலையால், அணுக் கதிர்வீச்சால் ஒருபோதும் கான்சர் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று தலையில் அடிச்சு சத்தியம் செய்த அடையார் புற்றுநோய் மையத்தின் சாந்தா அம்மையாரின் பொக்கிஷமான பேட்டியை தொலைக்காட்சிகளில் திரும்ப திரும்ப ஒளி பரப்பிய காட்சிகளை எல்லாம் சிந்தித்து பார்த்தால்,படிச்சவன் சூதும் வாதும் செய்தால் போவான் ஐயோன்னு போவான் என்பது தான் ஞாபகத்திற்கு வருகிறது.
இப்படி எதையாவது நியாயமா கேட்டா,நீ என்ன அப்துல் கலாமை விட பெரிய புடுங்கியா என்ற தேசபக்தி கேள்விகள் முன் வந்து நிற்கும். அட அப்துல் கலாமே சொல்லிட்டாரு, ஆண்டிபட்டியாரே சொல்லிட்டாரு கட்டாயம் நம்பித் தான் ஆகவேண்டும் என்ற காலம் எல்லாம் மலையேறிப் போச்சு ஆபீசர்ஸ்.
வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான் என்று கேலியாக சொல்வதைப் போல,விஞ்ஞானியா இருக்குறவன், பார்ப்பதற்கு ஞானி மாதிரி தெரியுறவன் எல்லாம் கட்டாயம் பொய் சொல்ல மாட்டான் என்று நம்புவோமாக!
அட என்னய்யா வயசுக்கு மரியாதை கொடுக்க வேண்டாமா? சரிங்க பொய் சொல்ல மட்டார்ர்ர்ரர்ர்ர்ர் இது போதுமா:)

-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக