செவ்வாய், 23 ஜூன், 2015

கட்டாயம் தலைக்கவசம் அணியுங்கள்


சாலை விபத்துகள் நடக்க,நம்மூரில் உள்ள மிக மோசமான சாலைகள் தான் முக்கிய காரணமே தவிர, தலைக்கவசம் எல்லாம் ரொம்ப சாதாரண காரணம் தான் என்று பலர் வியாக்கியானம் பேசுகிறார்கள்.
தமிழ்நாட்டு சாலைகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் ஒரு போதும் மாறப் போவதில்லை.அதற்காக அப்படியே சாலையின் குழியில் விழுந்து செத்துப் போகப் போறீங்களா?
ஐயோ பாவம் தலைக்கவசம் மட்டும் அணிந்திருந்தால் அந்த பையன் கட்டாயம் பிழைத்து இருப்பான்,தலையில் மட்டும் தான் அடி,உடம்புல வேற எந்த ஒரு சிராய்ப்பு கூட இல்லை என்று நாம் கேள்விப்பட்ட, நேரடியாக பார்த்த எத்தனையோ நண்பர்கள்,நண்பர்களின் நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களின் சாலை விபத்து மரணங்கள் பல உண்டு.
போலீஸ்காரர்கள் சம்பாதிக்க தான் இந்த திட்டம் என்று வெட்டிப் பேச்சு பேசாமல்,உங்க உசிரு உங்களுக்கு முக்கியம்னா தலைக்கவசம் அணியுங்கள். வெட்டி விவாதங்கள் வேலைக்கு ஆகாது.நல்லத சொன்னா கேட்டுக்கோங்கடே!
அடிக்கிற நம்மூரு வெயிலுக்கு இந்த தலைக்கவசம் தமிழ்நாட்டுக்கு ஒத்து வராது. வேர்வையில் தலை முடி கொட்டிப் போகும் என்று நீங்கள் வருந்தினால், ஒருவேளை தலைக்கவசம் இல்லாவிட்டால் உங்கள் முடி மட்டும் அல்ல, மண்டையும் சேர்த்தே சிதறிப் போகும் வாய்ப்பு இருக்கு பரவா இல்லையா?
விபத்து எப்போ நடக்கும்,எப்படி நடக்கும் என்று யாருக்கும் தெரியாது..நம்ம தப்பா , எதிராளி தப்பா என்றெல்லாம் பேசி பயன் இல்லை.இன்னும் சொல்லப் போனால், நியாயம் பேச நம்ம உசிரோட இருப்போமா என்பதே தெரியாது. நொடிப் பொழுது தான். அதற்குள் எல்லாம் முடிஞ்சு போகும்..போனது போனது தான்..
தலைக்கவசம் என்பது அரசாங்கம் சொல்லாமலே, சட்டம் போடாமலே நாமாக முன் வந்து செய்ய வேண்டிய விடயம்.காரணம் உன் உசிரு உனக்கு தான் முக்கியம்.சாலை விபத்தில் செத்துப் போனா அரசாங்கத்துக்கு மக்கள் தொகையில் ஒன்று குறைவு அவ்வளவு தான். அதிகம் கவலைப்பட உங்க ஊட்டுக்காரங்க தான் இருப்பாங்க. ஊர்க்காரன்,உலகத்துக்காரன் இல்ல.
எதற்கெடுத்தாலும் அமெரிக்காவைப் பார்த்தீர்களா, அண்டார்டிகாவைப் பார்த்தீர்களா என்று உதாரணத்துக்கு எடுக்கும் மேதாவிகள், ஒன்று தெரிந்து கொள்ளுங்கள்.வெள்ளைக்காரன் சாதாரண சைக்கிள் ஓட்டுவதற்கே தலைக்கவசம் இல்லாமல் ஓட்டமாட்டான்.
-ஆன்டனி வளன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக