வெள்ளி, 17 ஜனவரி, 2014

வெள்ளை மாளிகையின் உயர்விருதை பெரும் சாதனை தமிழன்!


வெள்ளை மாளிகையின் உயர்விருதை பெரும் சாதனை தமிழன்! 

அண்ணன் சிவலிங்கம் சிவானந்தன்!

அமெரிக்காவின் வெள்ளைமாளிகையினால் வழங்கப்படும் உயர்விருதான "Champion of Change" விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார் ஈழத் தமிழரான சிவலிங்கம் சிவானந்தன்.

நேற்று 29ஆம் திகதி காலை வெள்ளைமாளிகையில் இந்த விருது வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது. சொந்த நாட்டை விட்டு புலம்பெயர்ந்து, அமெரிக்காவில் வாழும் வேற்று நாட்டவர்களில்,முன்னோடியான கண்டுபிடிப்புக்களுக்காக வழங்கப்படும் இந்த விருதைப் பெற்றவர்களுள் பேராசிரியர் எஸ். சிவானந்தன் ஒரவரே தழிழர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.இவருடன் சேர்த்து 11 பேருக்கு நேற்று விருதுகள் வழங்கப்பட்டன.

சிக்காக்கோ இலினோஸ் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறைப் பேராசிரியராகக் கடமையாற்றும் இவர், இயற்பியலில் பல கண்டுபிடிப்புக்களை வெளியிட்டுள்ளதுடன், பல ஆய்வுகளிலும் இடுபட்டுள்ளார். தனது முயற்சியினால் "சிவானந்தன் ஆய்வு மையம்" என்ற இயற்பியல் ஆய்வு கூடத்தை நிறுவி அதனூடாக பல ஆய்வு நடவடிக்கைகளுக்கு உதவி வருவதுடன், இலாபநோக்கற்ற பல ஆய்வு உதவிகளையும் மேற்கொண்டிருக்கிறார். இவரது அனுசரணையுடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக பெளதீகவியற்றுறையினரும் கூட்டு ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இவருடைய கண்டுபிடிப்புகளுக்காக, ஏற்கனவே அமெரிக்க ராணுவத்தால் "Friend of the Night" விருது வழங்கி கவுரப்படுத்தப் பட்டவர்.

மின்னணு துறையுன் வளர்ச்சிக்கும், கண்டு பிடிப்புகளுக்கும் தன் வலுவான பங்களிப்பை செய்து வரும் இவர், ஏற்கனவே இருநூறுக்கும் மேற்ப்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதி வெளியிட்டு உள்ளார்.

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் சிவானந்தன் யாழ். இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.

புலிகள் ஆயுதம் மட்டுமே ஏந்தினார்கள் என்று சொன்னவர்களுக்கு!ஆயுதம் ஏந்துவதில் மட்டும் அல்ல, புலிகளின் தம்பிமார்கள், அறிவாயுதம் எந்துவதிலும் சளைத்தவர்கள் அல்ல என்று உலகுக்கு நிரூபித்த தமிழன்!

வாழ்த்துக்கள் அண்ணா!

- ஆன்டனி வளன் 
  மே 30, 2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக